இலங்கையில் நேற்று ஒரே நாளில் அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகியது!!

1015

கொரோனா மரணங்கள்..

இலங்கையில் கோவிட் – 19 தொற்று காரணமாக அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கோவிட் – 19 தொற்றுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், 409 மரணங்கள் கோவிட்டின் இரண்டாவது அலையின் போது பதிவாகியுள்ளது. 2020 ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.