கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 2 நாட்களில் உயிரிழந்த இளம் யுவதி!!

871

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த யுவதி ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார். மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார் என ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிதிமாலியந்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 4 பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் மூத்த மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரிதிமாலியந்த கெமுனுபுர ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் குறித்த யுவதி கோவிட் தொற்றுக்குள்ளாகி தியதலாவை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 10 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் இரண்டு நாட்களின் குறித்த பெண்ணுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அம்பியுலன்ஸ் உதவியுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் அதிகாரிகளின் தாமதம் காரணமாகவே மகள் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்த யுவதியின் சடலம் பதுளை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.