யாழில் மூன்று பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!!

372

abuseயாழ்ப்பாணத்தில் 19 வயதுடைய இளம்பெண்ணொருவரை மூன்று நபர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை யாழ். துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தென்மராட்சி வரணி இடைக்குறிஞ்சியை சேர்ந்த இளம் பெண்ணே பாதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண், இளைஞனொருவருடன் வடமராட்சி, வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில்,இருவரையும் வழிமறித்த மூன்று நபர்கள் இளைஞனைத் தாக்கிவிட்டு, யுவதியினை தூக்கிச் சென்று யாக்கரை மயானத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து மூவரும் சென்றபின்னர் குறித்த இளைஞன் நெல்லியடிப் பொலிஸாரிற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யுவதியினையும் இளைஞனையும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், யுவதியை வல்லுறவுக்குட்படுத்தியவர்களின் ஒருவரின் கைப்பையினை கைப்பற்றிய பொலிஸார் அதனை வைத்து பாலச்சந்திரன் பிரபாகரன் என்ற நபரைப் தேடி வருவதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.