யாழில் ஒருவர் வீதியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

1314

யாழில்..

யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் திடீரென மயக்கமடைந்து நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்புத் துறையில் இருந்து இன்று காலை திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க சென்ற முதியவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவர் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபர் என தெரியவருகிறது.

உயிரிழந்தவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் மரக்கறி கடை நடத்துபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.