வவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் பெயர்கள் : குவியும் பாராட்டுக்கள்!!

3726


வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் பெயர்கள்..



வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவு கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள், தமிழ் பெரியார்களின் பெயரை வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



மருக்காரம்பளை கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன் அவர்களின் எண்ணக்கருவில் கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு புதிதாக தமிழ் மன்னர்கள் , தமிழ் பெரியார்களின் பெயர்களை வைக்கும் திட்டம் தொடர்பில் பொதுமக்கள் , பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு,




கணேசபுரம் முதலாம் ஒழுங்கை தொடக்கம் 12ம் ஒழுங்கை வரை அழைக்கப்பட்ட வீதிகள் அவற்றின் ஒழுங்கைகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் என பல்வேறு பெயர்கள் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.


தொடர்ந்து இப் பெயர்களை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் அனுமதியுடனும் பிரதேச செயலக ஒத்துழைப்புடனும் சட்டரீதியாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இவ்வீதிகளுக்கு இப்பெயர் பலகைகளை நிர்மாணிக்கவும் மக்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணேசபுரம் முதலாம் ஒழுங்கை ( இடது) : இளங்கோ வீதி, முதலாம் ஒழுங்கை ( வலது) : சுப்பிரமணியம் வீதி, 2ம் ஒழுங்கை : புனித சின்னப்பர் வீதி,


2ம் ஒழுங்கை 1ம் குறுக்கு தெரு : நாச்சியார் வீதி , 2ம் ஒழுங்கை 2ம் குருக்கு தெரு : கபிலர் வீதி , 3ம் ஒழுங்கை : அகத்தியர் வீதி , 4ம் ஒழுங்கை : விவேகானந்தர் வீதி, 4ம் ஒழுங்கையின் 1ம் குருக்கு தெரு : மாருதி வீதி, 4ம் ஒழுங்கையின் 2ம் குருக்கு தெரு : கரிகாலன் வீதி,

5ம் ஒழுங்கை : கம்பர் வீதி , 6ம் ஒழுங்கை : கருமாரி அம்மன் கோவில் வீதி , 7ம் ஒழுங்கை : தனிநாயகம் வீதி, 8ம் ஒழுங்கை : எல்லாளன் வீதி, 8ம் ஒழுங்கையின் 1ம் குருக்கு தெரு : அருணாசலம் வீதி , 9ம் ஒழுங்கை : பாண்டியன் வீதி,

10 ம் ஒழுங்கை : சேக்கிழார் வீதி, 11ம் ஒழுங்கை : பாரதி வீதி, புதிய வீட்டுத்திட்ட ஒழுங்கை : விபுலானந்தர் வீதி, 40 வீட்டுத்திட்ட வீதி : சேரன் சுற்றுவட்ட வீதி, சேவாலங்கா வீதி : காந்தி வீதி எனவும் மாற்றம் பெற்றுள்ளது.

கிராம சேவையாளரின் இந்த நடவடிக்கை பாரிய வரவேற்பினை பெற்றுள்ளதுடன் கிராம சேவையாளருக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் பல்வேறு அமைப்பின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.