முல்லைத்தீவுவில் வேலியால் பாய்ந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார்!!

1210

விபத்து..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பத்துடன் மோ.தி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து சென்று குறித்த கார் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகமாகச் சென்ற கார் தேராவில் வளைவில் திருப்பமுடியாத நிலையில் காணி ஒன்றுக்குள் பா.ய்ந்து மின் கம்பத்தினை உ.டைத்துத் தள்ளி பனைமர கன்று ஒன்றினை மோ.தியுள்ளது.

இதில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாகத் தெரியவந்துள்ள போதும் தெய்வாதீனமாகக் கா.யங்கள் எதுவும் இன்றி உ.யி.ர் த.ப்பியுள்ளார்கள்.

இந்த விபத்தின் போது கார் க.டுமையான சே.தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் வி.சாரணைகளை நடத்தி வருகின்றார்கள்.