வடக்கில் மீண்டும் கொரோனா விசுவரூபம் : ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று உறுதி!!

1795

கொரோனா..

வடக்கில் மீண்டும் கொரோனா விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் இன்று (23.02.2021) ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஆய்வு கூடங்களில் இன்று 658 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 25 பேருக்கும், யாழ் மாவட்டத்தில் 17 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நடன ஆசிரியையுடன் நேரடியாகத் தொடர்புட்ட 12 பேர் உள்ளிட்ட 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,

யாழ் மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.