கதிர்காமம் பகுதியில் தீக் காயங்களுக்கு உள்ளாகி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது வீட்டுக்கு தீ வைத்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் மூவர் எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக கதிர்காமம் – கந்தசூரிகம பகுதியில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி வீட்டுக்கு தீ வைத்ததில் கணவர், மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். நேற்று (09) இரவு 9.15 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.