வவுனியா வடக்கு வலய கல்விப் பணிமனையில் சேவையாற்றி ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு!

2315

வவுனியா வடக்கு வலய கல்விப் பணிமனையில் சேவையாற்றி கடந்த வருடம் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றுமுன்தினம்  25.02.2021(வியாழன்)ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

திருமதி.தேவிகா உமாதேவன்- (பிரதிக் கல்விப் பணிப்பாளர் கல்வித் திட்டமிடல்),திரு.கந்தசாமி சத்தியநாதன்(நிதி உதவியாளர்),திரு.வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன்(பதவிநிலை அலுவலர்) ஆகியோர் கடந்த வருட இறுதிப் பகுதியில் அகவை அறுபதில் (60) தடம் பதித்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தனர். நாட்டில் நிலவும் கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக மேற்படி நிகழ்வினை உரிய தினத்தில் மேற்கொள்ள முடியாமல் போனது.

குறைந்தளவான வலய கல்விசார்,கல்விசார உத்தியோகத்தர்களின் பங்கு பற்றலுடன்  மேற்படி ஒய்வு பெற்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் மிக  எளிமையாக  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.