வவுனியா மாவட்டத்தில் 6631 மாணவர்கள் க.பொ.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்!!

1203

க.பொ.சாதாரண தரப் பரீட்சை..

நாடாளவிய ரீதியில் இன்று (01.03.2021) ஆரம்பமாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் ஆறாயிரத்து 631 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இப் பரீட்சைக்காக 52 பரீட்சை நிலையங்களும் 14 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, மாணவர்களது அடையாள அட்டையை பரிசோதித்து பரீட்சை மண்டபத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பரீட்சை நிலையங்களுக்கு பொலிசார் பா.துகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அமைதியான முறையில் பரீட்சைகள் நடைபெறுகின்றது.