வவுனியாவினை சேர்ந்த ஒருவர் நாயாற்று கடலில் சடலமாக மீட்பு!!

3659

நாயாற்று கடலில்..

முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று (07.03.21 ) ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்க சென்றவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நால்வர் குளித்துக்கொண்டு இருந்த போது நீரில் அடித்து செல்லப்பட்டிருந்தனர். அதில் மூவர் கரை ஏறியுள்ளார்கள் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

காணாமல் போனவரை தேடும் பணி சுமார் மூன்று மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட போது கடலில் இருந்து காணாமல் போனவரினுடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வவுனியாவினை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.