பிறந்து ஏழு வாரங்களேயான சிசு கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!!

639


கொரோனா..



பிறந்து ஏழு வாரங்களேயான சிசுவொன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் ஜி.விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.



நுரையீரலில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த குழந்தைக்கு கோவிட் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.




இதையடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்ததுடன், பின்னர் பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.


இதேவேளை, குறித்த குழந்தையின் தாய்க்கும் கோவிட் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.