வவுனியாவில் மகளிர் தினத்தில் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் வீடு கையளிப்பு!!

1383

மகளிர் தினத்தில்..

வவுனியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு சௌபாக்கியா திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்று இன்று (08.03) கையளிக்கப்பட்டது.

வவுனியா, பண்டாரிக்குளம், நாவலர் வீதியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு ஜனாதிபதியின் சௌபாக்கியா வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களம் ஊடாக இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் குறித்த வீடு அமைக்கப்பட்டது.

பாடசாலை செல்லும் நான்கு பிள்ளைகளுடன் தற்காலிக குடிசை வீட்டில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும், மழையின் போதும் உட் செல்லும் மழை நீரால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தும் குறித்த குடும்பம் வாழ்ந்து வந்தது.

இந்நிலையில் தற்போது கிடைக்கப்பட்ட வீட்டின் மூலம் தமக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளதாக அக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
குறித்த வீடு கையளிக்கும் நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் சஜீபன் பிரியதர்சினி, சமுர்த்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன்,

நகரசபை உறுப்பினர் சுமந்திரன், சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.