சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழப்பு!!

1092

பஜிர் நாதிர்..

இம்முறை சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவில் காதியார் வீதியை அண்டி வசிக்கும் பஜிர் நாதிர் எனும் மாணவனே இவ்வாறு நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

மிக திறமைசாலியான மாணவன் என பாடசாலை நிருவாகத்தால் கணிக்கப்பட்ட இவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முதல் நாள் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.