இரு தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம்!!

267


Busகொழும்பு, கோட்டையில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6.50 மணியளவில் செரமின் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.



காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லையென தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.