மகாபொல புலமை பரிசில் பெறுவோரின் தொகையை அதிகரிக்கத் திட்டம்!!

337

Mahapolaஉயர் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப் பரிசில் எண்ணிக்கையை எதிர்வரும் வருடங்களில் 2000 ஆக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளார்.

மகாபொல உயர்கல்வி புலமை பரிசில் உதவி நிதியம் வழங்கும் புலமை பரிசில் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் 45,000 மாணவர்களுக்கு மகாபொல புலமை பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

அந்த தொகையை 47,000 ஆக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களில் 50 சதவீதமானவர்களுக்கு மகாபொல புலமை பரிசில் வழங்கப்பட்டு வருகிறது.