வவுனியாவில் 2014 உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு பொருளியல் பாட கருத்தரங்கு!!

306

Seminarவரும் ஓகஸ்ட் உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பொருளியல் பாட கருத்தங்கு வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.தேவதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

மாணவர்களின் பெறுபேற்று மட்டத்தை உயர்த்தும் நோக்கில் வவுனியா தெற்கு வலயத்தின் ஏற்பாட்டில் வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு, மன்னார், மடு வலயங்களைச் சேர்ந்த பொருளியல் பாட மாணவர்களுக்கான இலவச பொருளியல் பாட கருத்தரங்கு சீமா நிறுவனத்தின் அனுசரனையில் பேராதனை பல்கலைக்கழக பொருளியல் பாடவிரிவுரையாளர் திரு.கணேசமூர்த்தி அவர்களை வளவாளராக கொண்டு வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் நாளை(12) புதன்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.