திருமணமான 3 நாளில் இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்!!

12174

ஹரிணி..

திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் மதுரையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் உ.யிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த டாக்டர் அசோக் விக்னேஷ் என்பவர் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ் 3 ஆம் ஆண்டு படித்துவந்த நிலையில்,

அதே அரசு ம.ருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறையில் எம்.டி இரண்டாம் ஆண்டு படித்துவந்த மருத்துவர் ஹரிணி(26) என்பவருடன் காதல் ஏற்பட்டு, இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியினர் இருவரும் தங்கள் புது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த நிலையில், ஹரிணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டில் இருந்தபடியே ஹரிணி சிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் ஹரிணிக்கு உடல்வலி அதிகமான நிலையில், அவரது கணவர் மருத்துவர் என்பதால் அவரே தனது மனைவிக்கு வலிநிவாரணி ஊசி போட்டுள்ளார்.

வலி ஊசி போட்ட சிறிது நேரத்தில் ஹரிணி ம.யக்கமடைந்து சு.ருண்டு வி.ழுந்துள்ளார். மனைவி தி.டீரெனெ ம.யங்கி வி.ழுவதை பார்த்த அவரது கணவர், ப.த.றி.ப்போ.ய் உடனே ம.னைவியை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஹரிணி பரிதாபமாக உ.யிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் திருமணம் ஆகி சில மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரிணி எப்படி உ.யிரிழந்திருக்க கூடும் என மருத்துவர்கள் சில காரணங்களை கூறியுள்ளனர்.

அதன்படி, சில மருந்து மாத்தி.ரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சில நேரங்களில் அதிதீவிர ஒவ்வாமையாக மாறி மூ.ச்சுக்குழல் சுருங்கியும், இதய ஒட்டம் நின்றும் ம.ரணம் நிகழும் அ.பாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் ஹரிணி எப்படி இ.றந்தார் என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.