மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் வயோதிபர் திடீர் மரணம்!!

4219

வயோதிபர்..

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேருந்து ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.

இதன் போது குறித்த பேருந்தில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார். மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோ.தனைச்சாவடியில் குறித்த பேருந்து சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் போதே குறித்த வயோதிபர் பேருந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை. மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.