ஆவா குழுவுடன் தொடர்புடைய 6 பேர் கைது!!

312


Arrestயாழ். சுன்னாகத்தில் ஆவா குழுவுடன் தொடர்புடைய 6 பேரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதையடுத்து, வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொகான் டயஸின் விசேட உத்தரவின் பேரில் பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.



மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 6 பேரை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து சிறிய ஆயதங்கள் சிலவற்றையும் கைப்பற்றியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.



குறித்த அறுவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன், அறுவரையும் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.