7 வயது சிறுவன்..
மோட்டார் சைக்கிளொன்றின் எரிபொருள் தாங்கியின் மூடியை கழற்றி நுகர்ந்து பார்த்த 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உ.யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தம்புள்ளை, வெலமிடியாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ளை, வெலமிடியாவ முதன்மை பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி கற்று வந்த சஜித் குமார முணசிங்க என்ற சிறுவனே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது பாட்டியின் இல்லத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளின் மூடியை கழற்றி நுகர்ந்து பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் ம.யக்கம் அடைந்ததாகவும்,பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,சிறுவன் கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது உ.யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுவனின் பி.ரேத ப.ரிசோதனைகள் தம்புள்ளை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.