கொழும்பில் பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு : பெண்கள் உட்பட 34 பேர் கைது!!

1403

பேஸ்புக் விருந்து..

கொழுப்பின் புறநகர் பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பேஸ்புக் விருந்து சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்ட இந்த பேஸ்புக் விருந்து சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர், யுவதிகள் உட்பட 34 பேர் பிலியந்தலை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய பிலியந்தலை விடுதி ஒன்று சு.ற்றிவளைத்து சோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை சோதனைக்குட்படுத்தும் போது 16 பேரிடம் க.ஞ்.சா ப.க்கட்களும், 12 ஐஸ் போ.தை பொ.ரு.ள் மற்றும் ஆ.பத்தான போ.தை பொ.ட்.க.ளு.ம் பொலிஸாரால் கை.ப்பற்றப்பட்டுள்ளன.

இளைஞர், யுவதிகள் குறித்த போ.தை.ப் பொ.ரு.ட்களை அ.ரு.ந்தியுள்ளார்களா என சோ.தனையிட களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விருந்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்கள் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அவர்களுக்குள் விடுதி உரிமையாளரான பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கெஸ்பேவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.