மூன்று திருமணம் : 3 மனைவிகளையும் வீடியோ எடுத்து மி.ரட்டிய கணவன்!!

1489

தமிழகத்தில்..

தமிழகத்தில் பிரிந்து சென்ற மனைவி தன்னுடன் வந்து சேர்ந்து வாழ மறுத்ததால், அவருடன் நெ.ருக்கமாக இருந்த வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டுவிடுவேன் என்று கணவன் மி.ரட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்து இருக்கும் சானடோரியத்தில், பீகாரை பூர்வீகமாகக் கொண்ட பிரபல செல்வந்தரின் மகன் தான் சபீக் அகமது. இவரின் தந்தை 40 ஆண்டுகளுக்கு மேலாக தோல் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், சபீக் அகமதுவிற்கு ஏற்கனவே 2 திருமணம் ஆன நிலையில், மூன்றாவது திருமணம் கடந்த 2019-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்ற ஹைதராபாத் பெண்ணை பிரபல திருமண இணையதளம் மூலம் பார்த்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவரை திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணிற்கும் இது மூன்றாவது திருமணம். திருமணத்திற்கு பின்னர் சபீக் அகமது, தனது மனைவியுடன் ஒன்றாக இருக்கும் போது, அதை வீடியோவாக எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கணவர் என்பதால், அவரும் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு வீட்டில் இருந்து சபீக் அகமது வேலை செய்து வந்த காலத்தில், அவருடைய மனைவி கர்ப்பம் ஆகியுள்ளார்.

ஆனால், இது அவருக்கு பிடிக்காததால், மனைவியை அழைத்துச் சென்று கருவை கலைத்துள்ளார். கணவரின் தொடர் தொ.ல்.லை தாங்க முடியாமல், அந்த பெண் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று காவல்நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளது.

இதை அறிந்துஅ கொண்ட சபீக் அகமது, தன்னுடைய மனைவியை போனில் தொடர்பு கொண்டு, என்னுடன் வந்து சேர்ந்து நீ வாழவில்லை என்றால், நாம் இருவரும் ஒன்றாக இருந்த போது, எடுத்த வீடியோவை எல்லாம் இணையத்தில் பதிவிவேற்றிவிடுவே, வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துவிடுவேன் என்று மி.ர.ட்டியுள்ளார்,

ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதைக் கண்டு அ.திர்ச்சியடைந்த அவர், உடனடியாக சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அதன் பின் சபீக் அகமதுவை கைது செய்த பொலிசார், அவர் வீட்டில் சோ.த.னை மே.ற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீடியோக்கள் மட்டுமின்றி, அவர் முதல் 2 மனைவிகளுடன் நெருக்கமாக இருந்த வீடியோவுக் இருப்பதைக் கண்டு அ.திர்ந்துள்ளனர்.

பொலிசார் மேற்கொண்ட தொடர் வி.சாரணையில், முதல் மனைவி கான்பூரைச் சேர்ந்தவர், அவரையும் இவர் பிரபல இணையதளம் மூலம் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண்ணையும் இப்படி வீடியோ எடுத்து டார்ச்சர் செய்ததால், அவர் இவரை விட்டு விலகியுள்ளார். இவர் மீது, கான்பூர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார்.

இரண்டாவது மனைவி பெங்களூரை சேர்ந்தவர், இவரை தங்கள் வழக்கப் படி திருமணம் செய்து கொண்ட சபீக் அகமது, அவரிடம் இது போன்ற செயலில் ஈடுபட, அந்த பெண், காவல்நிலையத்தில் பு.கா.ர் கொடுத்து பிரிந்து சென்றுவிட்டார்.

தற்போது மூன்றாவது சி.க்கியுள்ள இவரை சென்னை பொலிசார் கைது செய்து சி.றையில் அ.டைத்துள்ளனர். மேலும் அவனிடம் தொடர்ந்து வி.சாரணை மேற்கொண்டால் பல விஷயங்கள் தெரியவரலாம் என்று நம்பப்படுகிறது.