வவுனியா முழுவதும் சிசிடிவி கமராக்கள் : பொலிஸாரால் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும்!!

2336

சிசிடிவி கமராக்கள்..

வவுனியா நகரில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு நகரின் முக்கிய சந்திகளில் CCTV கமராக்கள் பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா நகரில் இடம்பெறும் கு.ற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையில் நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக CCTV கமராக்கள் பொருத்தும் நடவடிக்கை வவுனியா வர்த்தகர் சங்கத்தின் பங்களிப்பில் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் வவுனியா தலைமை பொலிஸாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில் குறித்த கமராக்கள் அனைத்தும் கண்காணிப்படுவதற்கும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

வர்த்தக நிலையங்கள் , நகருக்கு வரும் பயணிகளின் நன்மை கருதியும் நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்கவுமே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.