பசறை கோர விபத்தின் திகில் அனுபவம் : உயிர் தப்பிய தாய் ஒருவர் வெளியிட்ட தகவல்!!

13337


விபத்தின் திகில் அனுபவம்..



பசறை 13ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிர் தப்பிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். “நானும் எனது குழந்தை பதுளை வைத்தியசாலைக்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்தோம். 20ஆம் கட்டையில் பேருந்தில் ஏறினோம்.



குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பயணிக்கும் போது திடீரென நானும் குழந்தையும் நித்திரையாகி விட்டோம். பேருந்து வேகமாக பயணித்தது. திடீரென மிகப்பெரிய சத்தம் ஒன்று கேட்டது.




திடீரென எழுந்து பார்த்தால் பேருந்து புரண்டு புரண்டு சென்றதனை நான் பார்த்தேன். என் கையில் இருந்த குழந்தையை காணவில்லை.
குழந்தை கையில் இருந்து வீசுப்பட்டு சென்றது. பேருந்து கீழே விழுந்தது. எனக்கு காயம் ஏற்பட்டது.


சிலர் என்னை வந்து தூக்கினார்கள். மேலே தூக்கி வந்தவர்களிடம் எனது குழந்தை எங்கே என கேட்டு கத்தினேன். எனினும் அதற்குள் குழந்தையை மலை உச்சிக்கு கொண்டுவந்து விட்டார்கள் என கூறினார்கள். தற்போது நானும் குழந்தையும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றோம் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்த கோர விபத்து காரணமாக 9 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.