மரத்துடன் மோட்டர் சைக்கிள் மோதியதில் ஒருவர் பரிதாபமாக பலி!!

2093

கதிரவெளி பிரதேசத்தில்..

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிலிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாகரையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆனந்தராஜா பார்த்தீபன் என்பவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார். குறித்த நபர் வாழைச்சேனை திருகோணமலை வீதியிலுள்ள கதிரவெளிபகுதில் சம்பவதினமான நேற்று மாலை மோட்டர் சைக்கிளில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கபட்டிலுள்ள மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே உ.யிரிழந்துள்ளார்.

இவ்வாறு உ.யிரிழந்தவரை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ச.டலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வி.சாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.