இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? : ஆண்களையே நிமிர்ந்து பார்க்காத ஒரு பெண்!!

1517

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் ஆண்களையே நிமிர்ந்து பார்க்காத ஒரு பெண் இருக்கிறாராம்.. இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா, அதுவும் பிரித்தானியாவிலா? என்றெல்லாம் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றுவிடாதீர்கள்.

உண்மையில், பிரித்தானியாவைச் சேர்ந்த Kirsty Brown (32)என்ற அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறதாம். யாராவது கவர்ச்சியான ஒரு ஆணை பார்த்தால், அந்த பெண் மயங்கி விழுந்துவிடுவாராம்.

(உன் அழகைப்பார்த்து மயங்கிவிட்டேன் என்றெல்லாம் சொல்வார்களே, அது இதுதானோ?) Kirstyக்கு ஒரு அபூர்வ மூளைக் கோளாறு உள்ளது.

எந்த உணர்ச்சியானாலும், அது கோபமோ, சிரிப்போ அல்லது பயமோ, ஏன் கவர்ச்சியாக இருந்தால்கூட அவரை மயங்கி விழச்செய்துவிடும்.

ஆகவே, பெரும்பாலும் Kirsty வெளியே செல்வதே இல்லையாம். அப்படியே சென்றாலும் தலை குனிந்தே செல்கிறாராம். தனது சோகத்தை மறைத்துக்கொண்டு, இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது என்கிறார் Kirsty.

யாராவது என்னுடன் ச.ண்டைக்கு வந்தால், நான் வாக்குவாதம் பண்ணத்தொடங்கியவுடனேயே மயங்கி விழுந்து விடுவேன், உடனே சண்டை நின்றுவிடும் என்கிறார் வேடிக்கையாக.