அதிகரித்த கொரோனா தோற்றாளர்கள் : யாழ்.மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம்!!

1516

அதிகரித்த கொரோனா தோற்றாளர்கள்..

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் கோட்டை பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும்.யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாட்களுக்கு இடை நிறுத்தப்படுகின்றது.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுகின்றதுடன், வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் நிகழ்வுகளை நடாத்த அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மரண வீடுகளில் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.