கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே பரிதாபமாக பலி!!

3165

விபத்து..

கிளிநொச்சி – முகமாலை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் மோட்டார் வாகனமொன்றும் டிப்பர் வாகனமொன்றும் சற்றுமுன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனது .

இதன்போது மோட்டார் வாகனத்தில் பயணித்த இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் வாகனத்தை செலுத்திச் சென்ற தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.