வவுனியா வைத்தியசாலை தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று!!

1751

கொரோனா..

வவுனியா வைத்தியசாலை தாதி ஒருவருக்கு இன்று (27.03) காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர் சிலருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை வெளியாகின.

அதில், வவுனியா வைத்தியசாலையில் நோயாளர் விடுதி ஒன்றில் கடமையாற்றும் தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த தாதியுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான தாதியை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.