கொள்கலன் – லொறி மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

1659

விபத்து..

திருகோணமலை, ஹபரன பிரதான வீதியில் கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வாகனங்களில் சென்ற மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஹதரஸ் கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(27.03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு வாகனங்களும் விபத்துக்குள்ளாகி பாலமொன்றினுள் விழுந்துள்ளது.இதில் பயணம் செய்த லொறியின் சாரதியொருவருக்கும்,கொள்கலனில் பயணித்த சாரதிக்கும், அதன் உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் ஹபரன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருகோணமலையிலிருந்து ரத்மலான பகுதிக்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலனும்,குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.