யாழ்.மாவட்டத்தில் இன்று 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

1060

கொரோனா..

வடமாகாணத்தில் இன்று 143 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வடமாகாணத்தில் 743 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 143 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் யாழ்.மாவட்டத்திலேயே இவ்வாறு 143 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் வட மாகாணத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில்,

இன்றைய தினம் அதிகூடிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.