யாழ். கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகள் நாளை முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக அறிவிப்பு!!

1155

பாடசாலைகள்..

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில் யாழ். கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளையிலிருந்து ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட கோவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான க.மகேசன் இன்று தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ். மாவட்ட அரச அதிபர் ஆகியோர் ஆராய்ந்தே மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அதற்கமைய தற்போதுள்ள இடர் காலத்தைக் கருத்தில் கொண்டு நாளை முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை யாழ். கல்வி வலயப் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுகின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் மேலும் கூறியுள்ளார்.