யாழ் திருநெல்வேலி சந்தை கொரோனா கொத்தணி : 177 பேருக்கு கொரோனா உறுதி!!

1125

கொரோனா..

திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களோடு தொடர்புபட்ட 177 பேருக்கு இந்த மாதம் இதுவரை கோவிட் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார திணைக்களப் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் தற்போது அதிகரிக்கும் கோவிட் நிலைமை தொடர்பில் இன்று மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலையடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“திருநெல்வேலி பொதுச்சந்தையில் கடந்த மாதமும் எழுமாற்றாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டபோது கோவிட் வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை. இந்தமாதமே தொற்று தீவிர பரவலடைத்துள்ளது.

திருநெல்வேலி பொதுச்சந்தையில் தொடர்ந்தும் பி.சி.ஆர். பரிசோதனை இடம்பெறும். அதேகாலத்தில் ஏனைய சந்தைகளும் கண்காணிக்கப்படும். இதேநேரம், யாழ். மாநகரில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையத்தினரை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறும், வழக்கமான நிகழ்வுகளை இரத்துச் செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.