ஏ9 பிரதான வீதியில் விபத்து : வாகன சாரதிக்கு படுகாயம்!!

4288

விபத்து..

ஏ9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியின் அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(29.03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.