வவுனியாவில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று!!

1285

கொரோனா..

வவுனியாவில் 6 பேருக்கு இன்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா கண்டி வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட போது அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த வகையில், வவுனியா புளியங்குளம் பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 4 பேருக்கு இன்று (29.03) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், செட்டிகுளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

இதன்படி வவுனியாவில் 6 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.