மட்டக்களப்பில் புதிய வகை மீன் இனமொன்று மீனவரால் பிடிப்பு!!

980

புதிய வகை மீன்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள வாவியில் புதிய வகை மீன் இனம் ஒன்று மீனவர் ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் 5 அடி நீளம் உடையதாக இருப்பதுடன் வாவியில் இதுவரைக்கும் பிடிபடாத மீன் இனமாக உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பு போன்று காட்சியளிக்கும் இந்த மீனைக் குறித்த மீனவர் காங்கேயனோடையிலுள்ள தடாகம் ஒன்றில் விட்டுள்ளார். இந்த மீனைப் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.