வவுனியாவில் அரசே நுண்கடன்களை தள்ளுபடி செய் என ஆ.ர்ப்பாட்டம்!!

959

அரசே நுண்கடன்களை தள்ளுபடி செய்..

அரசே நுண்கடன்களை தள்ளுபடி செய் எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் க.வனயீர்ப்பு போ.ராட்டம் ஒன்று இன்று(30.03.2021) இடம்பெற்றது.

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் ஒன்றியம், உழைக்கும் பெண்கள் முன்னனி மற்றும் வடமாகாண மக்கள் திட்டமிடல் மன்றம் என்பன இணைந்து இந்த ஆ.ர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆ.ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் “நுண்கடன்களால் பா.திக்கப்பட்டவர்களின் தரவுகளை கிரிப் பட்டியலில் இருந்து அகற்று, நுண்கடன்களால் பா.திக்கப்பட்டவர்கள் மீதான நீதி நடவடிக்கைகளை உடன் நிறுத்து,

ச.ட்டவி.ரோதமான மீற்றர் வட்டியை நிறுத்து, நுண்கடனில் மூழ்காதே ம.ரணத்தை தழுவாதே” எனப் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

ஆ.ர்ப்பாட்டகாரர்கள் மாவட்ட செயலக வளாகத்திற்குள் ஊர்வலமாக சென்று உதவிப் பிரதேச செயலாளர் கே.சபரிஜாவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.