கொழும்பில் கோர விபத்து : இரண்டு இளைஞர்கள் பலி!!

6586

விபத்து..

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டி, பொல்வத்தை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவத்துகொடையில் இருந்து வந்த மோட்டார் வாகனம் ஒன்று பொல்கட்டுவ வீதியில் திருப்ப முயற்சித்த போது பன்னிப்பிட்டிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றைய இளைஞர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் யட்டின்தோட்டை, மலல்கொட பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய கசுன் பண்டார மற்றும் மீகொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பிரபோத மதுஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.