பேலியகொடை மேம்பாலத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்த கார்!!

1260

தீப்பிடித்து எரிந்த கார்..

பேலியகொடை மேம்பாலத்திற்கு அருகில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன் காரணமாக பேலியகொடை பிரதேசத்தில் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை கோரமான வாகன விபத்துக்கள் காரணமாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா ஹக்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துடன் சம்பந்தப்பட்ட கொள்கலன் வண்டியின் சாரதியை கைது செய்ய தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.