யாழில் பொழுதுபோக்காக கடலில் பயணித்த இளைஞன் கடலில் மூழ்கி பலி!!

5486

யாழில்..

வடமராட்சி கடல் பகுதியில் பொழுது போக்கிற்காக நண்பர்களுடன் படகில் பயணித்த இளைஞன் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களோடு பொழுது போக்கிற்காக படகில் பயணித்த நிலையிலேயே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று(04.04.2021)மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். பயணித்துக்கொண்டிருந்த படகிலிருந்து தவறுதலாக வீழ்ந்த போது படகின் சுழலியில் (fபான்) சிக்கி தலையில் காயமடைந்த நிலையில் கடலில் மூழ்கியுள்ளார்.

சுமார் மூன்று மணி நேரம் சுழியோடிகள் மூழ்கிய இளைஞனைத்தேடிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவரை உடனடியாகவே நோயாளர் காவு வண்டியில் மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.