விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் படுகாயம்!!

3432

விபத்தில்..

திருகோணமலை கண்டி வீதி நான்காம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 2 சிறுவர்களோடு, தாயும், தந்தையும் பயணித்ததாகவும் ,தந்தையும், ஒரு பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.