பேஸ்புக் சட்டத்தை கடுமையாக்கும் இலங்கை அரசாங்கம்!!

1333

சமூக வலைத்தளங்களில்..

சமூக வலைத்தளங்களில் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பில் போலி குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இவ்வாறான செயற்பாடு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் என அறிவிக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு அவசியமான திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நபர்களுக்கு சேறு பூசும் நடடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சமூக அமைப்பு, வல்லுணர்கள் உட்பட நிபுணர்கள் பலர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.