பேஸ்புக்கால் நடந்த மற்றும் ஒரு சமூக அவலச் சம்பவம்!!

348


FBஏழு மாதங்களாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை அழிக்க முயற்சித்த போது அந்த குழந்தை உயிருடன் பிறந்துள்ளது. குழந்தை பிறந்தும் காதலன், அந்த குழந்தையை துண்டுகளாக வெட்டி எரித்து விட்டு, மீதம் இருந்து உடல் பகுதிகளை மொறட்டுவ ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பான செய்தி கல்கிஸ்சை நீதிமன்றத்தில் தெரியவந்தது.

இது பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பு வெகுதூரம் சென்றதால் நடந்த மற்றுமொரு சமூக அவலத்தின் பிரதிபலனே இந்த சம்பவம்.



மேற்படி சம்பவம் தொடர்பாக கல்கிஸ்சை நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பித்த தெஹிவளை பொலிஸார், பேஸ்புக் மூலம் அறிமுகமான இளைஞனுக்கும் யுவதிக்கும் ஏற்பட்ட காதலை அடுத்து, திருமணம் செய்யும் வாக்குறுதியுடன் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதால் யுவதி கர்ப்பம் தரித்துள்ளதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

யுவதி அழகு கலை நிபுணராக தொழில் புரிந்து வந்துள்ளதுடன் இளைஞர் களியாட்ட விடுதியொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார்.



இளைஞர் தன்னுடன் பணிப்புரியும் வேறு ஒரு பெண்ணுடன் காதல் தொடர்பை கொண்டிருந்ததால், பெண்ணின் கருவில் உள்ள குழந்தை அழிக்க தீர்மானித்திருந்தார்.



இதனையடுத்து அந்த இளைஞர் கேகாலை பிரதேசத்திற்கு சென்று மருத்துவர் ஒருவரிடம் மருந்தொன்று பெற்று அதனை பாலுடன் கலந்து யுவதிக்கு கொடுத்துள்ளார்.


அதனை அருந்திய சில மணிநேரத்தில் யுவதி வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அழுத் தொடங்கியுள்ளது.

தொப்புகுள் கொடியை கத்தி ஒன்றினால் வெட்டிய இளைஞர், குழந்தையை மற்றுமொரு அறைக்கு கொண்டு சென்று துணியால் முகத்தை மூடி கொலை செய்து, குழந்தையின் உடலை துண்டுகளாக வெட்டியுள்ளார்.


இதன் பின்னர் தெஹிவளை சந்திக்கு சென்று பெட்ரோலை வாங்கி வந்து குழந்தையின் உடல் பகுதிகளை எரித்துள்ளார். முதலில் உடல் முழுமையாக எரியாத காரணத்தினால் மீண்டும் எரித்துள்ளார்.

குழந்தையின் உடல் பகுதிகளில் பல எரிந்து சாம்பலாகி போனாலும் சிறு பகுதிகள் மீதம் இருந்துள்ளன. அவற்றை கறுப்பு பை ஒன்றில் பொதி செய்து, முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்துச் சென்று பிலியந்தல கொஸ்பெலன பாலத்தில் இருந்து மொறட்டுவ ஆற்றில் வீசியுள்ளார்.

மாந்திரீகம் ஒன்றை செய்து அதனை ஆற்றில் வீச போவதாக இளைஞர், முச்சக்கர வண்டி சாரதியிடம் கூறியிருந்ததாக தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் யுவதி தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து உடல் நலம் குன்றியிருந்த யுவதியை கைது செய்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


கல்கிஸ்சை மேலதிக நீதவான் பிரபர்ஷா ரணசிங்க, களுபோவில வைத்தியசாலைக்கு சென்று யுவதியை பரிசோதித்துடன் அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேக நபரான இளைஞனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டார். தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.