வவுனியா குழுமாட்டுச் சந்தியில் புதுப்பொலிவுடன் மரக்கறி மற்றும் மீன் சந்தை!!

2554

குழுமாட்டுச் சந்தியில்..

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட குழுமாட்டுச் சந்தியில் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் (2017-2020) எனும் கருப்பொருளின் கீழ் மரக்கறி மற்றும் மீன் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இக் கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இது வரையிலான காலமும் வீதியோரங்களில் சிறிய கொட்டைகையில் மீன் வியாபாரம் , மரக்கறி வியாபாரம் மேற்கொண்ட வியாபாரிகளுக்கும் இவ் கட்டிடம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுடன் பொதுமக்களும் ஒரே இடத்தில் இரு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.