வவுனியா மருக்காரம்ளை கிராம அலுவலர் பிரிவில் மாபெரும் இரத்ததான நிகழ்வு!!

881

இரத்ததான நிகழ்வு..

சுயாதீன தமிழ் இளைஞர்களின் குருதிக்கொடை நிகழ்வு சமயபுரம் சனசமூக நிலைய மண்டபத்தில் இன்று (11.04.2021) ஞாயிற்றுகிழமை காலை நடைபெற்றது.

மருக்காரம்பளை கிராம அலுவலர் நா.ஸ்ரீதரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமதாசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

ஏராளமான இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை இவ் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

குருதிக்கொடையானது சமயபுரம் கிராம அபிவிருத்தி சங்கம், மணிபுரம் கிராம அபிவிருத்தி சங்கம், இளங்கோ விளையாட்டுக் கழகம், அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம், பாக்கியம் அறக்கட்டளை, சுயாதீன தமிழ் இளைஞர்கள் ஆகிய பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இதில் பங்குபற்றிய குருதி கொடையாளர்களுக்கு “மனிதநேய மாண்பாளர்” பட்டம் வழங்கி சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.