சம்பியன்ஸ் கிண்ண வெற்றி- இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி!

485

trophy

இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இந்திய அணியின் 15 வீரர்களுக்கும் தலா 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்திருக்கிறது.

மேலும் அணியின் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியதன் மூலம் 2 மில்லியன் டொலர் தொகையை ( 12 கோடி இந்திய ரூபாய் ) பரிசாக இந்தியா பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பண முதலை பிசிசிஐ எந்த வித பண உதவியோ குறைந்தபட்சம் ஒரு அனுதாபமோ தெரிவிக்கவில்லை இங்கு குறிப்பிடத்தக்கது.