வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!!

1182

மரக்கறிகளின் விலை..

தமிழ் – சிங்களப் புத்தாண்டு புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு மக்கள் ஆலய தரிசனம் மேற்கொண்டு மரக்கறி உணவுகளை அதிகம் சமைத்து உண்டு விரும்தோம்பல் செய்வது வழக்கம்.

இதனை சாதகமாக பயன்படுத்தி வவுனியாவில் மரக்கறி விற்பனையாளர்கள் மரக்கறிகளின் விலையை சடுதியாக உயர்த்தி விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக நேற்றைய தினம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி 240 ரூபாய்க்கும், 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேபோல் அனைத்து மரக்கறிகளின் விலையும் ஒரேநாளில் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.