உயிரிழந்து 8 மாதமாகியும் இலங்கை வராத வீட்டுப் பணிப்பெணின் சடலம் : உரிய நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை!!

253


Body

சவுதி அரேபியாவில் இறந்த ஒரு பெண்ணின் உடல் 8 மாத காலமாகியும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் முறையிட்டிருக்கிறார்கள்.



இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து, சடலத்தை வருவித்துத் தருமாறு உறவினர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனையில் நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை ரமணி என்ற பெண் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த ஆண்டு ஐனவரி மாதம் 25 ஆம் திகதி சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காகச் சென்றார்.



இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி சுகயீனம் காரணமாக இறந்துள்ளதாக ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி அவரின் வீட்டிற்கு தகவல் அனுப்பபட்டிருந்தது.



உடலை இலங்கைக்கு கொண்டுவந்து தருமாறு கேட்டு சம்மதக் கடிதத்தினை அமைச்சுக்கு கணவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை, சுமார் 8 மாதகாலமாகியும் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படாதுள்ளது.