ஆத்மசாந்தி நிகழ்வும் மரநடுகையும்..

கலைஞர் விவேக் அவர்களின் ஆத்மசாந்தி நிகழ்வும் மரநடுகையும் வவுனியா புதிய கற்பகபுரம் விளையாட்டு மைதானத்தில் இன்று (18.04.2021) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், புதிய கற்பகபுர மக்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது விவேக்கின் உருவபத்திற்கு மலர் தூவியதுடன் தொடர்ந்து மைதானத்தை சூழ மரக்கன்றுகள் நடப்பட்டன.

கலைஞர் விவேக் ஒருகோடி மரம் நடுதல் எனும் பெருங்கனவை நனவாக்க நாம் ஒவ்வொருவரும் ஒன்றுபடுவோம் எனும் தொனிப்பொருளில் இவ் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






